ஈழத் தமிழர்களுடன் கனடா வருகின்ற கப்பல் இடையில் முற்றுகை இடப்படலாம்!புலனாய்வுத் தகவல்
27th July 2010 · 0 Comments
ஈழத் தமிழ் அகதிகள் சுமார் 200 பேருடன் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது என்று கூறப்படும் தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பலான எம்.பி.சன்.சீ கனேடிய கடற்பரப்பை அடைவதற்கு முன் முற்றுகையிடப்படலாம் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் அல்லது கனடாவின் கடலோர காவற்படையினர் இம்முற்றுகை நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடும் என்று இத்தகவல்களில் கூறப்படுகின்றது.
இந்த இரு நாடுகளின் அதிகாரிகளும் கப்பலை மிகவும் நெருக்கமான முறையில் அவதானித்துக் கொண்டு இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.



