Filed Under:  விளையாட்டு

எனது “ரோல் மாடல்’ டிராவிட்: ரெய்னா

27th July 2010   ·   0 Comments

“”கிரிக்கெட்டில் எனது “ரோல் மாடல்’ ராகுல் டிராவிட்,” என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், சுரேஷ் ரெய்னா இடம் பெற்றுள்ளார். காலேவில் நடந்த முதல் டெஸ்டில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. கொழும்புவில் நடக்கும் 2 வது

டெஸ்டில், காய்ச்சல் காரணமாக யுவராஜ் சிங் வெளியேற, சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள காத்திருக்கிறார் ரெய்னா.

இது குறித்து ரெய்னா கூறியது: டெஸ்ட் அரங்கில் முதன் முதலாக காலடி வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை 98 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளேன். முதல் தர போட்டிகளிலும் அசத்தியுள்ளேன். கொழும்பு டெஸ்டில் சிறப்பாக பேட்டிங் செய்ய முயற்சிப்பேன். கிரிக்கெட்டை பொறுத்த வரை எனது “ரோல் மாடல்’ ராகுல் டிராவிட் தான். கடந்த 10 ஆண்டுகளாக அவரைத் தான் பின்பற்றி வருகிறேன். விக்கெட் இல்லை: கொழும்பு டெஸ்டில் இந்திய பவுலர்கள் இஷாந்த் சர்மா, மிதுன் ஆகியோர் சிறப்பாகவே பந்து வீசினர்.

இருப்பினும் விக்கெட் கைப்பற்ற முடியவில்லை. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், சிறப்பாக பந்து வீசி விக்கெட் கைப்பற்றுவோம். இலங்கை அணி முதல் இன்னிங்சில் வலுவான ஸ்கோரை எட்டினாலும் கவலை இல்லை. இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவ்வாறு ரெய்னா தெரிவித்தார்.

  • Share/Bookmark

By தமிழ்செய்தி.கொம்

Readers Comments (0)





Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Latest News

இலங்கை

DSC_0006

ஓவியர் புகழேந்தியின் ‘போர் முகங்கள்’ ஓவியக்காட்சி நெல்லையில் தொடங்கியது!

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ...

தமிழ்நாடு

DSC_0095

ஓவியர் புகழேந்தியின் ”போர் முகங்கள்” ஓவியக்காட்சி சென்னையில் தொடங்கியது!

  முதலில் சென்னையில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, தஞ்சை, நெல்லை நகரங்களைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடந்து ...

உலகம்

mvsunsea

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல! போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள்: “சன் சீ கப்பலில் உள்ள தமிழர்கள்” கடிதம்

வன்கூவரின் அருகில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு தொகுதி குடிவரவாளர்களினால் எழுதப்பட்டு ...