கென்யாவில் மதுபானம் நச்சானதில் 17 பேர் பலி
27th July 2010 · 0 Comments
கென்யா நைரோபியில் உள்ள கிபேரா பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 17 பேர் பலியானதுடன் பலர் கண்பார்வையை இழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘சன்கா’ என்றழைக்கப்படும் இந்த மதுபானத்தைக் காய்ச்சியதாகக் கூறப்படும் பெண்ணொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மதுபான மாதிரிகள் இரசாயன பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன..
இது திட்டமிட்ட செயலா என்பது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கென்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கென்யாவில் சட்டவிரோத மதுபானம் அருந்துவதால் வருடாந்தம் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றமை குறிப்பிடத்தக்கது.



