கனடா, மொன்றியலில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு
28th July 2010 · 0 Comments
கடந்த 27.07.2010 ஞாயிற்றுக்கிழமை கறுப்பு யூலையின் 27 ஆம் ஆண்டு நிறைவையொட்டி ‘கறுப்பு யூலை விழிப்பு” நிகழ்வு மொன்றியலில் இல 419, St.Roch இல் அமைந்துள்ள (பழைய இமிகிறேசன்) மண்டபத்தில் நடைபெற்றது.
மாலை ஆறு மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் இசை நடன நிகழ்வுகளும் சிறப்பு பேச்சுக்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக “ உறவுகளுக்கு கைகொடுப்போம்” (Connecting Families) எனும் தொனிப்பொருளையுடைய தாயகத்தில் ஏதிலிகளாக்கப்ப்டுள்ள மக்களை காப்பாற்றும் செயற்திட்டம் பற்றிய விளக்கக் குறிப்புகள் இடம் பெற்றதுடன் அதில் மக்கள் கலந்துகொண்டு தமது பணியை தொடர்ந்து செய்ய முன்வந்தமை அமைந்தது.
அத்துடன் தமிழ் ஆங்கிலம் பிரெஞ்சு மொழிகளை உள்ளடக்கிய கறுப்பு யூலை ஆவணப்புத்தகம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இலங்கையை பொருளாதார ரீதியாக பலமிளக்க வைப்பது பற்றிய புதிய செயற்திட்டம் ஒன்று பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வினை கனடியத் தமிழர் பேரவையின் மொன்றியல் கிளையினர் ஏற்பாடு செய்து சிறப்புற நடத்தியிருந்தார்கள்.



