புலிகள் இயக்கத்துக்கு உதவிய சிங்களவர்கள் இருவருக்கு 11 வருட கடூழிய சிறை!
28th July 2010 · 0 Comments
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைப் படுகொலை செய்கின்றமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு தகவல்களை வழங்கி இருந்தனர் என்கிற வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட சிங்களவர்கள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 11 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தது.
மங்கள சமரவீரவை மாத்தறை அல்லது கொழும்பில் வைத்து படுகொலை செய்கின்றமைக்கு தேவையான தகவல்களை சேகரித்து புலிகளுக்கு இவர்கள் வழங்கி இருந்தனர், புலிச் சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களை பொலிஸாருக்கு வெளிப்படுத்த தவறி விட்டனர் ஆகியன இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ் சாட்சிகள், சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டு தீர்ப்பளித்தார்.



