மந்திரி மகனை கொன்றது தலிபான் படை
26th July 2010 · 0 Comments
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாண அமைச்சரின் மகனை, தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மியன்இப்திகார் ஹூசைன்; இவரது ஒரே மகன் ரஷீத்(27). அவாமி தேசிய கட்சியைச் சேர்ந்த இப்திகார் ஹூசைன், தலிபான்களின் பயங்கரவாத செயலை கண்டித்து வந்தார்.
அவாமி தேசிய கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களை தலிபான்கள் ஏற்கனவே சுட்டுக் கொன்றுள்ளனர். இந்நிலையில் இப்திகார் ஹூசைனின் ஒரே மகன் ரஷீத்தை, தலைநகர் நவ்ஷெரா பகுதியில் தலிபான்கள் நேற்று சுட்டுக் கொன்றனர். அரசியல் கட்சியைச் சாராத ரஷீத், அரசு துறையில் பணிபுரிந்து வந்தார். இப்திகார் ஹூசைன் மகன் கொல்லப்பட்டதற்கு பிரதமர் கிலானியும், அதிபர் சர்தாரியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



